மது போதைக்கு அடிமையான தலைமையாசிரியர்.. மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு.. குளித்தலையில் பரபரப்பு

x

குளித்தலையில் மது போதைக்கு அடிமையானதை மனைவி கண்டித்ததால் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ரவிக்குமார்.

இவர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ரவிக்குமார் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரவிகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்