சாதிப் பெயரை கூறி திட்டிய தலைமை காவலர் - இணையத்தில் அதிவேகமாக பரவிய ஆடியோ

x
  • ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே, சாதிப் பெயரை கூறி, இழிவாக பேசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
  • கிருஷ்ணகுமார் என்பவர், விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்று, ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பாக பிரச்சினை செய்துள்ளார்.
  • இதுதொடர்பாக செல்போன் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எதிர் தரப்பில் பேசிய தலைமை காவலர் சிவகுமார், செல்போனை கிருஷ்ணகுமாரிடம் கொடுக்குமாறு கூறி, அவரை சாதிப் பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
  • இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்