அறந்தாங்கியில் "தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு" - தனியார் மருத்துவமனையில் கொந்தளித்த உறவினர்கள்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
  • தேவர்பட்டி கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
  • அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாடை பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினர்.
  • இதனிடையே, அக்கினி பஜாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதையறிந்த உறவினர்கள், தவறான சிகிச்சையால் உயிரிழந்து விட்டதாக கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  • இதனால், மருத்துவமனை முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்