குரு நானக் 553 வது பிறந்த தின விழா-பிரதமர் பங்கேற்பு

x

குரு நானக்கின் 553 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய சிறுபான்மை நலத்துறை தலைவர் இக்பால் சிங் லால் புராவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் குருநானக்கை வழிபாடு செய்து அங்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்ட பிரதமர், சீக்கியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி, ஒற்றுமை போன்றவற்றை பெறுவதற்காக அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி என்கிற கொள்கையை பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பையும் பத்திரமாக இந்தியா கொண்டு வந்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்