"பேராசை பெரும் ஆபத்து" - லஞ்சம் வாங்கிய கையோடு சிக்கிய அதிகாரிகள்

x

25 ஆயிரம் லஞ்சம் பெற்ற பதிவுத்துறை உதவி செயற் பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்திற்கு, களப்பணி ஆய்வுக்காக 10 கிரய ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது உதவி செயற் பொறியாளர் ரமேஷூம் இளநிலை உதவியாளர் விஜயகுமாரும், ஆவணங்களுக்கு அனுமதி வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்திருந்த வழக்கறிஞர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை நாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் லஞ்ச பணத்தை அளிக்கும்போது, ரமேஷூம், விஜயகுமாரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்