"நீ என்னடா ரொம்ப நாள் பழகுன மாதிரி பாசத்துல உருகி பாயுற" - மேயர் பிரியாவை உருகவிட்ட நன்றியுள்ள ஜீவன்

x

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஆன் லைன் வழி உரிமம் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

ஆன்லைனில் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகள் மட்டுமின்றி தெருநாய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தெருநாய்களை பொதுமக்கள் தத்தெடுப்பதை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக மேயத் பிரியா நிகழ்சியில் பங்கேற்க வந்த போது, அங்கு வந்திருந்த ஒருவரின் நாயுடன் செல்லமாக கொஞ்சி வாஞ்சையுடன் விளையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்