மாடியிலிருந்து தவறி கிணற்றில் விழுந்த பாட்டி.. சமயோஜிதத்தால் உயிர் தப்பிய அதிசயம்

x

25 அடி உயர உறை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி, பத்திரமாக மீட்கப்பட்டார்.

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்திநகர் பகுதியை சேர்ந்த 65 வயதான லட்சுமி, அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கழிவறைக்கு செல்ல மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி, மாடியின் கீழே, திறந்த நிலையில் இருந்த 25 அடி உயர உறை கிணற்றில் விழுந்தார். கிணற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் பைப் ஒன்றை பிடித்தபடி உயிருக்கு போராடி வந்துள்ளார். கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், உறவினர்கள், மதுரவாயல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரமாக போராடி,கிணற்றுக்குள் இறங்கி, மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்