"என் பேரன் எந்த தப்பும் செய்யல சார்" - காவலர்களிடம் கதறி அழுது மயங்கிய பாட்டி

x
  • சேலம் அரு கே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது பேரன், குற்றமற்றவர் என கூறி காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்திய மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் விக்னேஷ், பாலன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
  • விசாரணையில் இருவரிடம் இருந்தும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
  • இந்நிலையில், தீவட்டிப்பட்டி காவல்நிலையம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட விக்னேஷின் பாட்டி தனது பேரன் குற்றமற்றவன் என கூறி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • இதில், காவலர்களிடம் தொடர்ந்து மூதாட்டி அழுது போராட்டம் நடத்திய நிலையில், திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சையளித்த காவலர்கள் அவரை பத்திரமாக அவரது வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்