தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து..மாணவர்கள் முன் அலட்சியமாக செயல்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை

x

நெல்லையில், குடியரசு தின விழாவின் போது கொடியேற்றும் நிகழ்வில் கொடி கீழே விழுந்ததுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது தலைமை ஆசிரியை அலட்சியமாக செயல்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் குடியரசு தின விழா கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்கையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அலட்சியமாக செல்போன் உபயோகித்துக் கொண்டிருக்கும் விதமான வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், கொடியேற்றும் நிகழ்வின்போது தேசியக் கொடி கீழே விழுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்