பயணி தெரியாமல் எடுத்த வீடியோவால் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செல்போனில் பேசிய படி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் இடையே அரசு நகரப் பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுநராக பிரதீப் குமார், செல்போனில் பேசிய படி பேருந்தி ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், ஓட்டுநர் பிரதீப் குமாரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்