நடந்து சென்ற வனக்காவலர் மீது மோதி ஏறி இறங்கிய அரசு பேருந்து - பதைபதைப்பு CCTV காட்சிகள்

x

காஞ்சிபுரத்தில் சாலையை கடக்க முயன்ற வனக்காவலர் மீது அரசு பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வனச்சரக அலுவலகத்தில் வன காவலராக பணிபுரியும் தணிகைமலை என்பவர், பணி நிமித்தமாக காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளார். இரட்டை மண்டபம் சிக்னல் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த வனக்காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் வனக்காவலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்