கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவிகள் சந்திப்பு - ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள்

x

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், கடந்த 1994-1997ம் ஆண்டில், பொருளியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறையின் முன்னாள் தலைவர் ஜெயலட்சுமி, பொருளியல் துறை பேராசிரியர்கள் சிந்து, பெரில் ஆர்.எஸ்.ராணி, ஜெயந்தி மற்றும் தமிழ்த்துறை தலைவர் ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். தங்களுக்கு கற்பித்த பேராசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னாள் மாணவியர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்