பயணிகளோடு மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து - கயிறு கட்டி மீட்கப்பட்ட பரபரப்பு காட்சி

x

பயணிகளோடு மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து - கயிறு கட்டி மீட்கப்பட்ட பரபரப்பு காட்சி

சென்னை வியாசர்பாடி பாலத்தில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டதை அடுத்து, பயணிகளை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை பிராட்வே பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கிச் சென்ற தடம் எண் 64-சி பேருந்து, வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது. அப்போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்ததால், அந்தப் பேருந்து பாலத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் பேருந்தில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், பேருந்தில் இருந்த சுமார் 25 பயணிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். ஆண்டுதோறும் இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்குவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்