ஓடும்போதே கழன்று விழுந்த அரசு பஸ் சீட்!.. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் விபத்து..

x

ஓடும்போதே கழன்று விழுந்த அரசு பஸ் சீட்!.. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் விபத்து.. அதிகாரிகள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில், அரசு பேருந்தின் இருக்கை கழன்று விழுந்ததில் பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து பழுகல் சென்ற அரசு பேருந்தின் இருக்கை கழன்று நியாயவிலை கடை பணியாளர் கிறிஸ்துராஜ் என்பவர் மீது விழந்தது.

இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், குழித்துறை போக்குவரத்து பணிமனையின் கிளை மேலாளர் தினேஷ், தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ரெத்தினம், டெக்னீசியன் சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்