12 மாதங்களாக பணிக்கு செல்லாமல் வருகை பதிவேட்டில் கையெழுத்து?

x
  • திருவள்ளூர் அருகே 2 மாதங்களாக பணிக்கு செல்லாத பேரூராட்சி செயல் அலுவலர், வருகை பதிவேட்டில் 52 நாட்களுக்கு கையெழுத்திட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் செயல் அலுவலர் பிரகாஷ்.
  • இவர் நிதி செலவீனத்தில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டி, பேரூராட்சி தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கவுன்சிலர்கள், பேரூராட்சி உதவி இயக்குநரிடம் புகாரளித்தனர்.
  • இதனால் ஜனவரி முதல் பணிக்கு வராத பிரகாஷ், நேற்று அலுவலகத்திற்கு சென்று, வருகை பதிவேட்டில் 52 நாட்களுக்கான கையெப்பத்தை இட்டதாக கூறப்படுகிறது.
  • இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்