உதகை மக்களுக்கு இன்ப செய்தி! - படகு இல்லத்தில் சாகச விளையாட்டுப் பூங்கா..

x

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் சாகச விளையாட்டுப் பூங்கா பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரிக்கரையோரத்தில் ஜிப் லைன், சைக்கிளிங் போன்ற சாகச விளையாட்டுகள் அமைக்கப்பட உள்ள நிலையில், பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மே மாதத்தில் பணிகள் நிறைவடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க இருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்