மூட்டு வலிக்கான பேண்ட்களில் எடுக்க எடுக்க வந்த தங்கம்.. சென்னை AIRPORT -ல் நூதன தங்கம் கடத்தல்!

x

கத்தார், துபாய், கொழும்பில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புடைய 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது துபாயில் இருந்து வந்த 3 பேரின் உள்ளாடைகளில் இருந்து 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 315 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த 2 இலங்கை பெண்கள் உள்ளிட்ட 4 பேரின் உள்ளாடைகள் மற்றும் மூட்டு வலிக்கான பேண்ட்களில் இருந்து 1 கிலோ 413 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் தோகாவில் சென்னை வந்த இளைஞரின் உள்ளாடையில் இருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 524 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 இலங்கை பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்துள்ளதாக சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்