கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு.. நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ், நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
x

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்குடன் நீதிமன்ற அவதூறு வழக்கும், நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து யுவராஜ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இந்த வழக்கை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்