"எங்களுக்கும் சேர்த்து பணம் கொடு..."...எஸ்.ஐ யிடம் தகராறு செய்த இளைஞர்கள் - காரில் பின் தொடர்ந்து தாக்கிய கொடூரம்

x

சென்னையில் மது அருந்தும்போது காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிவசங்கரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாருக்கு மது அருந்தச் சென்றனார். அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த சில இளைஞர்கள், தாங்கள் அருந்திய மதுவுக்கும் சேர்த்து பணம் கொடுக்குமாறு சிவசங்கரனிடம் கூறியுள்ளனர். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சிவசங்கரன், அங்கிருந்து தனது காரில் கோடம்பாக்கம் நோக்கி சென்றபோது, அவரை 2 கார்களில் பின்தொடர்ந்து வ‌ந்த அந்த இளைஞர்கள், கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே மடக்கி, அவரை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த உதவி ஆய்வாளர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிவசங்கரனின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்