"என் கணவரை மீட்டுத் தாருங்கள்..." கலெக்டர் ஆபீஸில் கை குழந்தையோடு பரிதவித்த மனைவி

x

மலேசியாவில் வேலைக்காக சென்ற தன் கணவரைக் கொடுமைப்படுத்துவதாக மனைவி குழந்தைகளுடன் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது துளசி கடந்த மார்ச் 28ம் தேதி தியாகராஜன் என்பவர் மூலம் மலேசியாவிற்கு சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் வேலை செய்வதற்காக சென்றுள்ளார்... இவரது மனைவி வித்யா குழந்தையுடன் இங்கு வசித்து வந்துள்ளார்... ஆனால் துளசிக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்றும், இங்கு சொன்ன வேலைக்கு மாறாக மலேசியாவில் சுமை தூக்க விடுவதாகவும், இதனால் கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் துளசி தெரிவித்துள்ளார். இதையடுத்து துளசியின் மனைவி வித்யா, தனது 4 வயது ஆண் குழந்தை மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். தனது கணவரை மலேசியாவில் இருந்து எப்படியாவது மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும் என அவர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்