2 மாதமாக பேசுவதை நிறுத்திய காதலி.. தனியாக அழைத்து காதலன் செய்த பயங்கரம் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காதல் விவகாரத்தில், மாணவியை வெட்டி விட்டு ஓடிய காதலன், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தவிளையைச் சேர்ந்த டெனிஷா என்பவர், மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வெர்ஜின் ஜோஷ்வா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வெர்ஜின் ஜோஷ்வாவிடம் பேசுவதை டெனிஷா நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியிடத்துக்கு வரவழைத்த வெர்ஜின் ஜோஷ்வா, டெனிஷாவை வெட்டுக்கத்தியால் கத் சராமரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, தப்பியோடி வெர்ஜின் ஜோஷ்வா, விரிகோடு பகுதியில் இரயிலுக்கு அடியில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்