அவுட்டிங் கூப்பிட்டு வராத காதலி.. நடுரோட்டில் சம்பவம் செய்த காதலன் - சென்னை தி நகரில் பரபரப்பு

x

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 24 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பாப்பிரெட்டி பாளையம் முள்ளிகாடு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இளம்பெண் தனது உறவினரான சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள வீட்டில், தோழிகளுடன் தங்கி வந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த காதலன் சஞ்சய், வெளியில் செல்லலாம் என இளம்பெண்ணை அழைத்து சென்றார். மேற்குமாம்பலம் அருகே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, காதலியை சஞ்சய் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, சஞ்சய் தனது காதலியை கல்லால் தாக்க முற்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்