காதலனுடன் பைக்கில் சென்ற காதலி...நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட இருவர் - பிரிந்த உயிர்... காதலன் மீது பாய்ந்த போக்சோ

x

கன்னியாகுமரியில், இருசக்கர வாகன விபத்தில் காதலி இறந்ததால், காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குளச்சல் அருகே களிமார் பகுதியை சேர்ந்த 19 வயதான விஜூ என்ற இளைஞர், தான் காதலித்து வந்த +2 மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மண்டைக்காடு அருகே வெட்டுக்காடு பகுதியை கடந்து செல்லும்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, பள்ளி மாணவி உயிரிழந்தார். படுகாயமடைந்த விஜூவுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி, விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்