பள்ளி வாசலில் பெண் சுட்டுக்கொலை? நகரமே பதற்றத்தில்...

x

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தவிர அம்மாநிலத்தில் இணைய சேவை முடக்கம் வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்