இந்தியா வந்த ஜெர்மன் அமைச்சர்-தலைநகரில் முக்கிய ஆலோசனை

x

இந்தியா வந்த ஜெர்மன் அமைச்சர்-தலைநகரில் முக்கிய ஆலோசனை ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை போரிஸ் பிஸ்டோரியஸ் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு மற்றும் தொழில்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்புத்துறை சார்ந்த நிகழ்ச்சியிலும், நாளை மும்பையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியிலும், ஜெர்மனி அமைச்சர் பங்கேற்கிறார். முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், ஜெர்மனி அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்