சிலிண்டரில் இருந்து திடீரென கசிந்த கேஸ்... பிரசாதம் தயாரிக்கும் போது நடந்த அசம்பாவிதம் - திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு கட்டண முறையில் பிரசாதங்கள் வழங்க, கோவில் நிர்வாகத்தின் சார்பில் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதற்காக தேர் வீதியில் உள்ள கட்டடத்தில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றபோது, அங்கிருந்த சிலிண்டரில் இருந்து திடீரென கேஸ் கசியத் தொடங்கியதால், ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

இதனிடையே, தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிலிண்டரை அப்புறப்படுத்தி, அதில் இருந்த எரிவாயுவை முழுவதுமாக வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்