கேஸ் சிலிண்டரில் கசிவு.. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறை - பெரும் விபத்து தவிர்ப்பு

x

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில், கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. தென்றல் நகரில் வசித்து வரும் மல்லிகா என்பவர், உணவு சமைத்துக் கொண்டிருந்த போது, கேஸ் சிலிண்டரில் இருந்து அதிகளவு கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்ததில், கேஸ் ரெகுலேட்டர் பழுதானது தெரியவந்தது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்