கும்பலாக சுத்தி கதறவிடும் யானைகள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் உலாவரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், இரவு நேரங்களில் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் லட்சுமி நாராயணன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள், அங்கிருந்த வேலிகளை மிதித்து சேதப்படுத்தியுள்ளன. மேலும் 3 மின் மோட்டார்களை சேதப்படுத்திய யானைகள், கோழிப் பண்ணையின் பக்கவாட்டு சுவரையும் சேதப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் யானைகள் உலா வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்