நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்... இறந்த பின்னும் விடாமல் வெட்டிய கொடூரம்

x

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் முன்விரோதம் காரணமாக, மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை, மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில், 5 பேர் கொண்ட கும்பல், ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதில், ஆனந்தகுமார் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்