ஆன்லைன் லாட்டரி மூலம் சூதாட்டம்... முதல் பரிசு ரூ. 75 லட்சம் வரை... - தட்டி தூக்கிய போலீசார்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி அருகே புதூரில் சோதனை நடத்திய போலீசார், கேரள மாநில ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிங்கார வேலன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். இதையடுத்து, ஷாகிராபாத் பகுதியில் காட்டன் சூதாட்ட எண்கள் எழுதிக்கொண்டிருந்த சஃபியுல்லா என்பவரையும் போலீசார் கைது செய்த நிலையில், அதில் முதல் பரிசு 75 லட்சம் என குறிப்பிட்டிருந்தது தெரியவர, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல், மூவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்