செல்போன் தராததால் விரக்தி? - ரயில் முன் பாய்ந்த பள்ளி மாணவன் - நெல்லையில் அதிர்ச்சி!

x

நெல்லை அருகே 11ம் வகுப்பு மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் பாளையம்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாணவனின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் ரயிலில் பாய்ந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவன் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததாகவும், பெற்றோர் செல்போன் தர மறுத்தத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்