தாய் பால் கொடுக்க முடியாததால் விரக்தி.. பிஞ்சு குழந்தையை விட்டு உயிரை மாய்த்த பெண்

x

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஆஷா.இவருக்கும் அமீன் பாஷா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இத்தம்பதிக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ஆஷா திடீரென வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தியில், ஆஷா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீசார், ஆஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்