பரமக்குடியிலிருந்து, திருச்செந்தூருக்கு 190 கி.மீ. சைக்கிளில் சென்று நேர்த்திக்கடன் - அரோகரா கோஷத்துடன் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்

x

திருச்செந்தூரில் நேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்த ஏராளமான பக்தர்கள் சைக்கிளில் வந்தனர்.

திருச்செந்தூரில் மாசி மகத்தினை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்த நேற்று சைக்கிளில் வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நாளை முருகனுக்கு பால் குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். அரோகரா கோஷத்துடனும், பக்தி பரவசத்துடனும் வந்த இவர்கள், சைக்கிளிலேயே சுமார் 190 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்