இனி அக்னி வீரா்களுக்கு இதில் முன்னுரிமை... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

x

அக்னி வீரா்களுக்கு ரயில்வேயில் அலுவலா் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

அக்னி வீரா்களுக்கு ரயில்வேயில் நேரடி பணியாளா் தோ்வு அடிப்படையில் நிலை-1 பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடும், நிலை-2 மற்றும் அலுவலா் அல்லாத பணிகளில் 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு பணியாளா் தோ்வின் போது உடல் தகுதித் திறன் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், முதல் பிரிவு அக்னி வீரா்களுக்கு பணியாளா் தோ்வில் வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் வரை சலுகையில், அடுத்தடுத்த பிரிவு அக்னி வீரா்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும்.

இது தொடா்பாக அனைத்து பொது மேலாளா்களுக்கும் ரயில்வே வாரியம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்