பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு... அடுத்த நொடியே நடந்த பயங்கரம் - விருதுநகரில் பயங்கரம்

x

சிவசங்குபட்டி கிராமத்தில் கீழ செல்லையாபுரத்தை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான ஏவிஎம் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகளில் 20 - க்கும் மேற்பட்டவர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஃபேன்சி ரக பட்டாசுக்கு தேவையான மணி மருந்துகளை,

தயார் செய்யும் போது மணி மருந்தில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால் ஆஜி, சந்தீப் குமார், வினோத் ராம்பால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்