ராகுல்காந்தி யாத்திரையில் இணைந்த 'RAW' அமைப்பின் முன்னாள்​ தலைவர்..

x

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரபிரதேச மாநில எல்லைக்குள் நுழைந்துள்ளது. எல்லைப்பகுதியில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். டெல்லி - உ.பி. இடையிலான லோனி நகரம் வழியாக உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத்துக்குள் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் மூன்று நாள் யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவின் "ரா" அமைப்பின் முன்னாள் தலைவர்

அஸ் துலாத், இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று ராகுல்காந்திக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்