மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு...மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை... மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
x

கொளத்தூர் அருகே கால் பந்தாட்ட சிறுமிக்கு உரிய நீதி வேண்டி அரசு மருத்துவமனை முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி, எம்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. கல்லூரி மாணவியான இவர், கால்பந்து வீராங்கனையாக உள்ளார். பயிற்சின் போது ஏற்பட்ட விபத்தால், காலில் மூட்டு மஞ்சை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவிக்கு சென்னை கொள த்தூர் புறநகர் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், அவருக்கு கால் வலி ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனை முன்பு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்