கால்பந்து ஜாம்பவான் பீலே உடலுக்கு மக்கள் அஞ்சலி

x

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல், இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

கால்பந்து உலகின் பிதாமகன் பீலே, கடந்த 29ஆம் தேதி பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில் மரணம் அடைந்தார். பீலே மறைவையொட்டி, பிரேசிலில் 3 நாட்கள் தேசிய துக்கம் அணுசரிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் விலா பெல்மிரோ கால்பந்து மைதானத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பீலே உடல், இன்று மாலை சாண்டோஸ் நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்