பாம்பாறு அணையில் வெள்ளப்பெருக்கு... கரையோர கிராமமக்களுக்கு எச்சரிக்கை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் நீடிக்கும் மழை காரணமாக, அணைக்கு வரும் 5 ஆயிரத்து 400 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்