ஈவு இரக்கம் இன்றி சாட்டை அடி.. சீனியர்களின் எல்லை மீறிய கொடூரம் - காண்போரை கலங்க வைக்கும் வீடியோ

x

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து, சாட்டையால் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த கல்லூரியில் படித்து வரும் வெளியூர் மாணவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் விடுதியில் தங்கியுள்ளனர். அந்த விடுதியில் அடிக்கடி கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், விடுதியில், தாங்கள் சொன்ன வேலைகளை செய்யாத ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, சீனியர் மாணவர்கள் 8 பேரை இடைநீக்கம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்