"விரைவில் வேலூரில் இருந்து விமானங்கள்.." - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

x

வேலூரில் இருந்து விரைவில் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சாலை வசதியில் உலகத்திலேயே 2 ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்துக்கு வரும் என்றும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்த‌தாகவும், இப்போது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேலூரில் உள்ள சிறிய விமான நிலையம் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த வி.கே.சிங், விரைவில் விமானங்கள் இயக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்