விமானத்தில் ஜன்னலோர சீட் கேட்டு குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் - தீயாய் பரவும் காட்சிகள்

x

பிரேசில் நாட்டில் விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்காக பெண்கள் 2 மணி நேரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சல்வேடார் நகரத்தில் இருந்து சா ப்வ்லோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் புறப்படத் தயாரானது...

அப்போது ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம், மற்றொரு பெண் தன் மாற்றுத் திறனாளி மகளுக்காக இடம் கேட்டுள்ளார்...

ஆனால் அப்பெண் விட்டுக் கொடுக்க மறுக்கவே சண்டை வலுத்து, இருவரின் குடும்பத்தாரும் சேர்ந்து தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் விமானம் களேபரமாகியது... சண்டையிட்ட அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்