மீனவர் உயிரிழந்த விவகாரம் : மனைவிக்கு குழந்தை பராமரிப்பாளர் பணி

x

கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் ராஜாவின் மனைவிக்கு, தனியார் பள்ளியில் குழந்தை பராமரிப்பாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது...

தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அடிப்பாளாறு பகுதியில், கர்நாடக வனத்துறையினரால் சுடப்பட்ட மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்த ராஜாவின் மனைவி பவுனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தை பராமரிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி ஆணையை, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், பவுனாவிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்