வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா விலகல்

x

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபிமன்யூ ஈஸ்வரனும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் காயம் காரணமாக முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்

அவர்களுக்கு பதிலாக நவ்தீப் சைனி, சவுரப் குமார், ஜெயதேவ் உனாத்கட் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்