சேலையில் தீ...3வது மாடியில் இருந்து விழுந்து பலியான பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில், சேலையில் தீப்பிடித்த பதற்றத்தில், 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஆழ்வார்பேட்டை, முன்னாள் கவுன்சிலர் ராணி கிருஷ்ணன் என்பவர் நடத்தி வரும் முதியோர் இல்லத்தில், ஜெயந்தி என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சமையல் அறையில் தேநீர் தயார் செய்யும்போது, ஜெயந்தியின் சேலையில் தீப்பற்றியுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர், எங்கு செல்வது என தெரியாமல் ஓடும்போது, மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்