ரயில் நிலையதில் தீ விபத்து...அச்சத்தில் பொதுமக்கள்

x

அரக்கோணம் ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் மேற்கூறையில், திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்