காலிறுதியில் நடந்த ஆக்ரோஷம்... 18 பேருக்கு YELLOW கார்டு

x

அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட 18 பேருக்கு YELLOW கார்டு வழங்கப்பட்டது. விதிமீறல், ஒழுங்கீனமான செயல்பாடு, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வீரர்களை எச்சரிக்கும் விதமாக YELLOW கார்டு வழங்கப்படுவது வழக்கம். நேற்றைய ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடிய நிலையில், அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி உள்பட 10 பேருக்கும், நெதர்லாந்து அணியில் 8 பேருக்கும் YELLOW கார்டு வழங்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் 18 பேருக்கு YELLOW கார்டு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.


Next Story

மேலும் செய்திகள்