விளைநிலங்களை வீட்டுமனைகளாக மற்றிய பெண் சார்பதிவாளர் சஸ்பெண்ட்

x

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ததாக, பெண் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து, தமிழக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால், பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி புரியும் வசந்தி என்ற சார்பதிவாளர், சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைநிலங்கள் வைத்திருந்த பலருக்கு வீட்டுமனைகளாகப் பதிவு செய்து கொடுத்தாக புகார் எழுந்தது. துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி தெரிவந்தது. இந்நிலையில், காலையில் வழக்கம்போல் அலுவலகம் வந்த வசந்திக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்றபோது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவரத்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்