பெண் அதிகாரிக்காக கள்ளக்காதலர்கள் மோதல்.. காரில் கடத்த முயற்சித்ததால் பரபரப்பு

x

கிருஷ்ணகிரி அருகே வங்கி பெண் அதிகாரி உடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த ஒருவரை, மற்றொரு கள்ளக்காதலர் தாக்கி காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

கணவரை பிரிந்த இவருக்கும், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஐ.டி.கால் செண்டர் உரிமையாளர் அஜித்குமாருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண் அதிகாரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள வங்கிக்கிளைக்கு மாறற்ப்பட்டபோதும், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நாகம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகத்திற்கும், பெண் அதிகாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

பெண் வங்கி அதிகாரிக்கு ஏற்கனவே அஜித்குமாருடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த ஆறுமுகம் அஜித்குமாரை அழைத்து கண்டித்துள்ளார்.

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் அஜித்குமாரை வழிமறித்து தாக்கிய ஆறுமுகம் தனது கூட்டாளிகளுடன் காரில் கடத்த முயன்றுள்ளார்.

அஜித்குமார் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த போலீசார், அஜித்குமாரை கடத்த முயன்ற ஆறுமுகம், காத்தவராயன், பார்த்திபன், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரையும், காருக்குள் வைத்திருந்த கத்தி, உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்