'பெண் பிள்ளைக்கு அப்பா ; பண்றதெல்லாம் தப்பா' நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியை சேர்ந்த ஜெசிலிக்கு, திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்து உள்ளார். அப்போது, அவர் சமூக வலைதளங்களில் கிடைக்கும், இளம் பெண்கள் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பேஸ்ஃபுக், மெசஞ்சர் மூலமாக தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அவரது நண்பர், ஜெசிலியிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜெசிலியின் நண்பர் ஊட்டி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் ஜெசிலியின் செல்போனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெசிலியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்